Email : eramsenthilkumar@gmail.com

Monday, July 28, 2014

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்

இதோ..

வெற்றிலை - 2
சாம்பார் வெங்காயம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டுபல் - 2

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.

வெள்ளைப் பூசணி - 100 கிராம்
வெள்ளரி விதை - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2
வெள்ளை மிளகு - 5 கிராம்
பூண்டு - 2 பல்
பனங்கற்கண்டு - 100 கிராம்

இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்

மேலும் சில டிப்ஸ் உங்களுக்கு...

1.மாத விலக்கின் போது அதிக அளவு ரத்த போக்கு ஏற்படுவதின் காரணமாக சோர்வு ஏற்படும்.இதனால் கோதுமையை கஞ்சி செய்து அடிக்கடி சாப்பிட்டால் அச்சோர்வை நீக்கலாம்.
2.பெண்கள் மாதவிடாய் நெருங்கும் நாள் முன்னரே தினசா¢ நாவல் பழம் சாப்பிட்டால் நாள் தள்ளிப்போகும்.
3.மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி அதிகம் ஏற்படும்.அந்த நாளில் எழுமிச்சை பழச்சாறு சாப்பிட்டு வர வலி நின்று விடும்.
4.அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் மாத விடாய் தடை ஏற்படாது.
5.உள்ளீ,மிளகு,போ¢ச்சம்பழம்,மாவிலங்கப்பட்டை நான்கையும் சம அளவு எடுத்து பாலில் அரைத்து பாக்கு அளவு ஒரு உருண்டை எடுத்து ஒரு வாரம் சாப்பிட்டு வர மாத விடாய் ஒழுங்காக வெளியேறும்..
6.தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்

No comments:

Post a Comment